search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோ கபடி லீக்"

    • 9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும்.
    • பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.

    நொய்டா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 50-வது லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்சை எதிர்கொண்டது. இரு அணியினரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் ஒன்றிரண்டு புள்ளி வித்தியாசத்திலேயே போட்டி நகர்ந்தது.

    கடைசி 2 நிமிடம் இருக்கும் போது தலைவாஸ் 36-33 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அந்த திடமான முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள தவறினர். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து புள்ளிகளை திரட்டிய பெங்களூரு புல்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் 'திரில்' வெற்றியை பெற்றது. பெங்களூரு அணியில் பாரத் 9 புள்ளியும், தலைவாஸ் அணியில் நரேந்தர் 12 புள்ளியும் எடுத்தனர்.

    9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும். சென்னையில் நடந்த லீக்கில் 4 ஆட்டங்களிலும் சறுக்கிய தமிழ் தலைவாசின் பரிதாபம் தொடருகிறது. பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 51-42 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), உ.பி. யோத்தாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

    • மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது.
    • நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய அரியானா, தலைவாஸ் அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்ததுடன் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

    பிற்பாதியிலும் அரியானா வீரர்கள் மளமளவென புள்ளிகளை எடுத்தனர். குறிப்பாக சூப்பர் டேக்கிள்ஸ் யுக்தியில் அருமையாக செயல்பட்டு தலைவாஸ் அணியை தத்தளிக்க வைத்தனர். இந்த வகையில் மடக்கி பிடித்ததில் மட்டும் 13 புள்ளிகள் திரட்டினர்.

    முடிவில் அரியானா அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. அதிகப்பட்சமாக தலைவாஸ் அணியில் சாஹில் குலியா 10 புள்ளியும், அரியானா தரப்பில் சிவம் படரே 8 புள்ளியும் எடுத்தனர்.

    இதுவரை உள்ளுரில் நடந்த மூன்று ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது. அரியானா 5 வெற்றி, 2 தோல்வி என 26 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேப்டன் நவீன்குமார் 11 புள்ளி எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இன்றைய லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

    • புரோ கபடி லீக்கில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும.

    இந்த கபடி திருவிழா நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்லா அணிகளுக்கும் உரித்தான நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த சுற்று முடிவில் புனேரி பால்டன் (5 வெற்றி, ஒரு தோல்வி) 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் (3 வெற்றி, ஒரு தோல்வி, 2 'டை') 21 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (3 வெற்றி, 2 தோல்வி, ஒரு 'டை') 20 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் (4 வெற்றி, ஒரு தோல்வி) 20 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    இந்த நிலையில் 4-வது சுற்று போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 11-வது இடத்தில் உள்ளது. நீரஜ் குமார் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. 4 ஆண்டுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரை நாங்கள் நன்றாக தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் டாப்-6 இடங்களுக்குள் முன்னேற முடியும். எங்கள் அணியில் துடிப்பான இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எங்களது ஆட்டத்தில் பலவீனம் எதுவுமில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவாக இருக்கின்றனர். ரசிகர்களின் ஆதரவு ஈடுஇணையற்ற சக்தியாகும். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நன்றாக தயாராகி இருக்கிறோம்.' என்றார்.

    தமிழ் தலைவாஸ் கேப்டன் சாகர் ரதி கூறுகையில், 'இந்த சீசனை மறக்க முடியாததாக மாற்ற தயாராகி வருகிறோம். சொந்த மைதானத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.

    • இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
    • டெல்லி அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது.

    புனே:

    12 அணிகள் மோதும் 10-வது 'புரோ கபடி' லீக் போட்டி நடந்து வருகிறது. புனேவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. பெங்கால் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டையுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது ஆதித்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. புனேரி பால்டன் 3 ஆட்டத்தில் 2 வெற்றி ஒரு தோல்வி பெற்றுள்ளது.

    இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்றது.

    • பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
    • பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-33 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை அணிகள் மோது கின்றன. குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை 38-22 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 34-31 என்ற கணக்கில் பெங்களூரையும் தோற்கடித்து இருந்தது.

    மும்பை அணி முதல் ஆட்டத்தில் 34-31 என்ற கணக்கில் உ.பி. யோதாவை தோற்கடித்தது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
    • இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன.

    நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

    யுமும்பா-உ.பி. யோதா அணிகள் மோதிய ஆட்டத்திலும் பரபரப்பு இருந்தது. இதில் மும்பை 34-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூ அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
    • லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும்.

    ஆமதாபாத்:

    ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி வரை ஆமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்து பெங்களூரு (வருகிற 8-13), புனே (15-20), சென்னை (22-27), நொய்டா (டிச.29-ஜன.3) மும்பை (ஜன.5-10), ஜெய்ப்பூர் (ஜன.12-17), ஐதராபாத் (ஜன.19-24), பாட்னா (ஜன.26-31), டெல்லி (பிப்.2-7), கொல்கத்தா (பிப்.9-14), பஞ்ச்குலா (பிப்.16-21) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் பிளே-ஆப் சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

    கடந்த அக்டோபர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி களம் இறங்குகிறது.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். லீக்கில் டாப்-2 இடங்களை கைப்பற்றும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    கடந்த ஆண்டு 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தோற்று அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி சாகர் தலைமையில் களம் காண்கிறது. எல்லா அணிகளின் சொந்த ஊரிலும் போட்டி அரங்கேறுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் பசெல் அட்ராசலி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ், பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சுரிந்தர் சிங் தலைமையிலான யு மும்பா-பர்தீப் நர்வால் தலைமையிலான உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    மும்பை:

    நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலப் பட்டியலில் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரு அணியினர் உள்பட மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலத்தில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் 4 பிரிவாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்படுவார்கள். 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.20 லட்சமும், 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.13 லட்சமும், 'டி' பிரிவு வீரர்களுக்கு ரூ.9 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இடம் பெறுவார்கள். ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தில் எடுக்க செலவிடும் தொகை தற்போது ரூ.4.4 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது.
    • இதில் ஜெய்ப்பூர் அணி 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இருப்பினும், கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி இறுதியில் 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 2வது முறையாக புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    • புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வென்றது.
    • முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதேபோல், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

    வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

    உ.பி.யோத்தாசுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி அரைஇறுதியிலும் கலக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் சந்தித்த இரு ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி தோல்வி.
    • இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.

    மும்பை:

    புரோ கபடி 9-வது லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடுகின்றன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று மும்பையில் நடைபெற்றன. 

    இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி, 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

    இரண்டாவதாக நடைபெற்ற பிளே ஆப் சுற்று போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

    இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×